தாயாரின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் – தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்ற பெண்ணின் மகன்!

Published by
Rebekal

குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தின் அடிப்படையில் இவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கியிருந்த இந்த தீர்ப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இவருக்கு மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான நாள் தெரிவிக்கப்படாவிட்டாலும், தூக்கு கயிறு பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் தூக்கு தண்டனை பெற்ற முதல் பெண்மணி  இவர்தான் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தூக்கு தண்டனை பெற்றுள்ள ஷப்னமின் மகன் முஹம்மது தாஜ், தனது தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தீர்ப்பை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது தாயாரை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனவே ஜனாதிபதிக்கு தான் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது தாயின் மரண தண்டனை குறைக்கப்பட்டு, தாயாருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சிறுவன் முகமது தாஜ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னமும் தனது மரண தண்டனையை குறைக்க வேண்டுமென உத்திரப்பிரதேச மாநில கவர்னருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago