காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமனம் ?

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.எனவே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் தான் பொறுப்பு என்று கூறி அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதாக கூறினார்.மேலும் உடனடியாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.இவருக்கு வயது 90 ஆகும் . மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025