சிஎஸ்கே கேப்டன் தோனி பப்ஜி விளையாட்டை அதிகம் விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி வீடியோ கேம் விளையாட்டுகளை அதிகம் விரும்புவதாகவும் குறிப்பாக பப்ஜி விளையாட்டை விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டிற்கு தோனி அடிமையாகிவிட்டதாகவும், அந்த விளையாட்டுடனே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே தொடர்பான உரையாடலின் பொழுது சாக்ஷி, தனது கணவர் எப்போதும் சுறுசுறுப்பான மனதை வைத்திருப்பதாகவும், அது நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
உங்களுக்கே தெரியும் மஹிக்கு அதிகமாக சிந்திக்கக்கூடிய மூளை. அது எப்போதும் ஓய்வெடுக்காது. அதனால் அவர் கால் ஆப் டியூட்டி அல்லது பப்ஜி போன்ற விளையாட்டுகளை அதிகம் விளையாடுகிறார். இது இவரது மனதை திசைதிருப்ப உதவுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த பப்ஜி விளையாட்டு தோனி படுக்கையறைக்கு அழைத்துவந்துவிட்டார். அவர் என்னுடன் பேசுகிறார் என்று நினைப்பேன், ஆனால் அவர் ஹெட்போன்களில் விளையாடும் மற்ற நபர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
தூங்கும் போதும் பப்ஜியை பற்றி நினைத்து கொண்டு தூங்குவதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த இடைநிறுத்தப்பட்ட இந்த சீசன் ஐபிஎல் 2021 மீண்டும் தொடங்கும் பொழுது சிஎஸ்கேவை தோனி முன்னிலைப்படுத்துவார் என்றும் இம்முறை சென்னை அணி நல்ல வடிவத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…