நிழல் உலக தாதா தாவூத் பாகிஸ்தானில் பல அடுக்கு பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை..பாகிஸ்தானின் ரீல் அந்துவிட்டது.. அம்பலமானது உண்மை..

Published by
Kaliraj
  • மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியும், சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்   சொகுசு வாழ்க்கையை  அனுபவித்து வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
  • அவருடைய சொகுசு வாழக்கை தொடர்பான புதிய  செய்தி மீண்டும் இந்த தகவலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன்  டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.  இவன் மீது 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. அண்மையில் மும்பை குற்றவியல் காவல் துறையினர்  லக்டாவாலாவை பாட்னாவில் வைத்து கைது செய்தனர்.

பின் இஜாஸிடம் காவல்துறையினர்  நடத்திய தீவிர விசாரணையில்,நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தாவூத் தங்கி இருக்கும் முகவரிகளை வெளியிட்டுள்ள இஜாஸ் லக்டாவாலா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, தாவூத் இப்ராஹிமுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த உறுதிபடுத்தப்பட்டுள்ள தகவலால் பாகிஸ்தானின் பொய்யான மறுப்பு  தற்போது அம்பலமாகியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

13 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

17 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

29 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

54 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago