அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியது!

Published by
லீனா

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியது.

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் காவல் நிலையத்தில், ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த புகாரில், மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற புரளியின் பேரில் 2 சாதுக்களும் அவர்களின் கார் ஓட்டுநரும் கடந்த ஏப்ரலில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாகவும், ஊரடங்கு காலத்தில் பாந்த்ரா ரயில் நிலையம் முன்பு புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டிருந்தது தொடர்பாகவும் ரிபப்ளிக் டி.வி.யில் வெளியான கருத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

அர்னாப் கோஸ்வாமி, இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோஸ்வாமிக்கு எதிரான புகார்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார்.

மேலும், மகாராஷ்டிர அரசு சார்பில், “பத்திரிகையாளருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒருவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூற உரிமையில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  ஆனால் இந்த குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லை எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு  எஃப்.ஐ.ஆர்களையும் நீக்கியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

57 minutes ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

1 hour ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

3 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago