Categories: இந்தியா

31 வருடம் தலைமறைவு.. 65 வயதில் கைதான ‘1993 கலவர’ குற்றவாளி.!

Published by
மணிகண்டன்

மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

1992ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 1993ஆம் ஆண்டு மும்பையிலும் கலவரம் நிகழ்ந்தது. அப்போது கலவரத்தில் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி இருந்தவர் சையது நாதிர் ஷா அப்பாஸ் கான்.

இவர் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னாளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் சையது நாதிர் ஷா நேரில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, அவரது வீடு, உறவினர்கள் வீடு என்று போலீசார் தேடி வந்துள்ளனர்.

சுமார் 31 ஆண்டுகளாக பல்வேறு முறைகளில் தேடி இறுதியாக செல்போன் அழைப்புகளை பின்தொடர்ந்து, அதன் மூலம் சையத் நாதிர் ஷா அப்பாஸ் கான் இருக்கும் இருப்பிடம் அறிந்து மும்பை, ரஃபி அகமது கிட்வாய் மார்க் காவல் நிலைய அதிகாரிகள் சையதை கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைதான சையத் நாதிர் ஷா அப்பாஸ் கானிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

6 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

7 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago