இந்தியாவில் முதன் முதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
மக்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல நகரமான மும்பை மாவட்டத்தில் 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டில் முதன் முதலாக 1 கோடி தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை அடைந்துள்ளது மும்பை.
மும்பையில் இதுவரை 507 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 1,00,63,497 பேருக்கு கொரோனா தடுப்பூசி மும்பையில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 72,75,134 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 27,88,363 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…