மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.! மத்திய அரசு அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்த ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்த்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
  • இந்நிலையில், தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர்கள் என்ற ஆதாரத்தையும், மற்றும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததற்கான ஆவணங்களையும், சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாட்டில் உள்ள பல இடங்களில் பல்வேறு தரப்பினர்கள் அவர்களது எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் நாடே போர்க்களமாக மாறியது. பின்னர் தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருத்தப்படமாட்டார்கள் என்றும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்றும், இந்த சட்ட திருத்த மசோதா கூறுகிறது.

இந்நிலையில், மூன்று நாடுகளில் இருந்து வந்த ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்த்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இதனால் தங்களது மதத்திற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உயர் அதிகாரி கூறுகையில், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினரும், தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர்கள் என்ற  ஆதாரத்தையும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததற்கான ஆவணங்களையும், அளிக்க வேண்டும். பின்னர் இதுதொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அதே சமயத்தில் மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தனி விதிமுறைகள் சேர்க்கப்படும். பின்னர் அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் மட்டும் அளிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அதிகாரி தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago