உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் வயல்வெளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் மயக்க நிலையில் மீட்கப்பட்டதில், 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் 13, 15, 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் கால்நடைகளுக்கு உணவளிக்க சென்றுள்ளதாகவும் அதன்பின் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமிகளை வாயில் நுரை தள்ளியபடி பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் சிறுமிகள் மூவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உடலில் எந்த காயமும் சிறுமிகளுக்கு இல்லையாம். இதுகுறித்து தற்பொழுது 6 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், ஒரு சிறுமி அவர்களின் தோழி என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது சிறுமிகள் கண்டெடுக்கப்பட்ட வயல்வெளியில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வைத்து போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…