குடியுரிமை சட்ட விவகாரம்… ஜாமின் இல்லாத பிரிவிகளில் வழக்கு பதிவு.. மம்தா அரசு திடீர் நடவடிக்கை..

Published by
Kaliraj
  • மேற்கு வங்கம் மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்களின் மீது ஜாமினில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 11ம் தேதி  கோல்கத்தா வந்திருந்தார். அங்குள்ள, துறைமுக பொறுப்பு கழகத்தின், 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அந்த துறைமுகத்திற்கு ஷியாம பிரசாத் முகர்ஜி என பெயரும் சூட்டினார். அப்போது, பிரதமர் மோடி தங்கியிருந்த இடத்திற்கு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்பினர்,பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்து, பிரதமர் மோடியை சந்தித்தார்.பின் பிரதமரை சந்தித்து விட்டு  வெளியே வந்த மம்தாவை, இடதுசாரி மாணவர்கள் முற்றுகையிட்டு, மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனக்கூறிய, மம்தா, மாணவர்கள் போராட்டத்திலும் சிறிது நேரம் பங்கேற்றார். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாத, 150 பேர் மீது, அம்மாநில காவல்துறை  வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உட்பட ஜாமினில் வெளிவர முடியாத சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மம்தா பேனர்ஜின் முடிவு மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

14 minutes ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

1 hour ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

3 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

4 hours ago