உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் காவல்துறையினருக்கு என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள், அங்கு புத்தகங்களை விற்பனை செய்து வந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.
அங்கு விற்கப்பட்டு வந்த புத்தகங்கள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அந்த புத்தகம் அனைத்தும் ரூ.35 கோடி மதிப்புள்ளவை எனவும், புத்தகங்களை வைத்திருந்த குடவுன், புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இடமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்.எஸ்.பி. அஜய் சஹானி தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சச்சின் குப்தாவை தேடும் பனியின் போலீசார் தீவிரமடைந்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட 12 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…