நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி 150 -கல்வியாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா காலத்தில் நீட் தேர்வையும்,ஜேஇஇ தேர்வுகளையும் நடத்தவேண்டாம் என்று பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வையும், ஜேஇஇ தேர்வையும் குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்ற முடியுடன் உள்ளது. இதனால், தனது முடிவில் இருந்து தேசிய தேர்வு முகமை மாறுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆவலுடன் வீட்டிலேயே காத்திருக்கிறார்கள் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜே.இ.இமெயின் மற்றும் நீட் ஆகியவற்றுக்கான தேதிகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற ஓராண்டு வீணாகிவிடும். நமது மாணவர்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் சமரசம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
கல்வியாளர்கள் ‘‘சிலர் அவர்களுடைய அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சிக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…