NEET-UG paper leak [File Image]
புது டெல்லி : பீகாரில் நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ கைது செய்வதற்கு முன், பீகார், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் சிலரையும் போலீசார் கைது செய்தனர். தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக தனக்கும் இன்னும் சிலருக்கும் வினாத்தாளின் நகல் கிடைத்ததாகக் கூறிய ஒரு ஆர்வலரும் இதில் அடங்குவர். இதுவரை நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் பாரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்புக் குழுக்களை அமைத்தது மத்திய அரசு. இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, நியாயமான விசாரணைக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறியதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…