அக்.1 முதல் புதிய கட்டணம் – ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்த மத்திய அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையில் டூப்ளிகேட் ரகசிய எண் (pin) பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில், மற்ற வங்கிகளில் 3 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

அதற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதுபோன்று தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் தங்கள் கணக்கு உள்ள வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

இதுபோன்று பணப் பரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் போது ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தங்கள் கணக்கு இருக்கும் வங்கிகளில் பணப் பரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு 5 முறை இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மேல் சேவையை பயன்படுத்தினால் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்திர ஏ.டி.எம் கார்டு பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி என்றும் பயனர்களுக்கு குறுந்செய்தி அனுப்புவதற்கு ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

4 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

18 minutes ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

52 minutes ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

3 hours ago