கொரோனா மரணங்கள் பற்றிய உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மயானங்களில் புதிய விதிமுறைகள்- உ.பி. அரசு..!

Published by
Edison

கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.

இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும்,

அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியே தெரியாமல் இருக்க சடலங்களை புகைப்படம் எடுப்பதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,சில வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.

அதன்படி,முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூரில்,பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்ட பேனர்களில்,”இங்கே சடலங்கள் அனைத்தும் இந்து சமய முறைகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.எனவே,சடலங்களை புகைப்படமோ மற்றும் வீடியோவோ எடுப்பது தண்டனைக்குரியக் குற்றம்” என எழுதப்பட்டிருக்கிறது.

இதனால்,உத்திரப்பிரதேசத்தில் கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பது உறுதியாகியுள்ளது.

 

Recent Posts

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…

14 minutes ago

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

2 hours ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

2 hours ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

3 hours ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

3 hours ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

4 hours ago