காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பட்டாசுகள் வெடிக்கத் தடை கோரி பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.மனுக்கள் மீது பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த ஆண்டு தரவுகளின் படி காற்று தரக் குறியீடு மோசமாக இருந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் ,விற்பனை செய்யவும் இன்று நள்ளிரவு (நவம்பர் 9-ஆம் தேதி ) முதல் நவம்பர் 30 -ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காற்றின் தரம் மிதமானதாக உள்ள நகரங்களிலும் , அதற்குக் கீழாகவும்இருக்கும் நிலையில் , பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…