டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் , ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேரும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை மூன்று முறை தள்ளிப்போனது.இந்நிலையில் நாளை தூக்கி உறுதி செயப்பட்டுள்ளது.
குற்றவாளி முகேஷ் தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நேற்று முன்தினம் காலை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி கொடுக்கப்பட்ட மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நேற்று காலை மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் பாலியல் சம்பவம் நடக்கும் போது நான் அந்த இடத்தில் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…