தனியார் வங்கியான யெஸ் வங்கி தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இதை நிர்வகிக்க எஸ்பிஐ முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் மட்டும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கண்காணித்து வந்தது. கடந்த ஆண்டு யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.
யெஸ் வங்கிக் கணக்கில் மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் என்ற கட்டுப்பாடு விரைவில் தளர்த்தப்படும்.யெஸ் வங்கியை மறு சீரமைக்கும் பணி இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என கூறினார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…