நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மும்பையில் ஆர்.பி.ஐ. நிதிக்கொள்கை ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதில், நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் குறைய வாய்ப்பு. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய பொருளாதாரம் இறுதி கட்டத்தில் நுழைகிறது. ஜனவரி- மார்ச் மாத 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக மாறும்.
செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் படிப்படியாக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…