நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டங்களுக்கு எதிரான நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார். இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் , வேளாண் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது ஹர்சிம்ரத் கவுர் அதை எதிர்க்கவில்லை.
தற்போது மசோதாவை எதிர்ப்பதாக கூறி வரும் அவரை யாரும் நம்ப போவதில்லை என கூறினார். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும் மத்திய அரசின் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறினார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…