ஹர்சிம்ரத் கவுரை யாரும் நம்ப போவதில்லை- பஞ்சாப் முதல்வர்..!

Published by
murugan

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையில் 3 வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டங்களுக்‍கு எதிரான  நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார். இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்து  பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் , வேளாண் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது ஹர்சிம்ரத் கவுர் அதை எதிர்க்கவில்லை.

தற்போது மசோதாவை எதிர்ப்பதாக கூறி வரும் அவரை யாரும் நம்ப போவதில்லை என கூறினார். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும் மத்திய அரசின் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும்  என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறினார்.

Published by
murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

9 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

9 hours ago