Categories: இந்தியா

26 வார கர்ப்பத்தை கலைக்க மனுவை கிடையாது -உச்சநீதிமன்றம்..!

Published by
murugan

26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி திருமணமான பெண்ணின் மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது 26 வார மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்  தெரிவித்து இருந்தார். இதை அக்டோபர் 9 ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்ணின் மனுவிற்கு அனுமதி வழங்கி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, திருமணமான பெண்ணின் 26 வாரக் கரு ஏதேனும் குறைபாடு உள்ளதா..? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவக்குழுவிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) அறிக்கையின்படி, கரு உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குழந்தைக்கு எந்த அசாதாரணமும் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில்  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில் கர்ப்பத்தின் காலம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான நேரத்தில் பிரசவத்தை நடத்தும் என்றும் பிரசவத்திற்கு அரசு உதவும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

மருத்துவக் கருத்தரிப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ், திருமணமான பெண்கள் மற்றும் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு  கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு 24 வாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

13 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

36 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

1 hour ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago