Categories: இந்தியா

26 வார கர்ப்பத்தை கலைக்க மனுவை கிடையாது -உச்சநீதிமன்றம்..!

Published by
murugan

26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி திருமணமான பெண்ணின் மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது 26 வார மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்  தெரிவித்து இருந்தார். இதை அக்டோபர் 9 ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்ணின் மனுவிற்கு அனுமதி வழங்கி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, திருமணமான பெண்ணின் 26 வாரக் கரு ஏதேனும் குறைபாடு உள்ளதா..? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவக்குழுவிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) அறிக்கையின்படி, கரு உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குழந்தைக்கு எந்த அசாதாரணமும் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில்  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில் கர்ப்பத்தின் காலம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான நேரத்தில் பிரசவத்தை நடத்தும் என்றும் பிரசவத்திற்கு அரசு உதவும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

மருத்துவக் கருத்தரிப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ், திருமணமான பெண்கள் மற்றும் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு  கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு 24 வாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

15 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

16 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

17 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

19 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

20 hours ago