பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர்.
பீகாரில் கொரோனா சோதனை கருவிகள் பற்றாக்குறை, திருட்டுத்தனமாக சந்தையில் விற்கப்படும் மருந்து உபகாரணங்கள் காரணமாக, ஒரு சில கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர். இவர்கள், கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் கூறினாலும், உள்ளூர் நிர்வாகம் அவர்களின் கூற்றுக்களை மறுத்துள்ளது. இதனால் பீதியடைந்த கிராம வாசிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
சக்ரா பிளாக்கின் சர்பஞ்ச் பிரமோத் குமார் குப்தா கூறுகையில், சில முதியவர்கள் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணங்கள் திடீரென அதிகரித்தது குறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 27 நாட்களில் 36 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தேன். ஆனால் கிட்கள் எதுவும் இல்லை. நான் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் கிட்களைக் கேட்டு, சோதனைக்கான கருவிகள் இப்போது கிடைத்துள்ளது. சோதனை செய்யப்படுகிறது என குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…