ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடக்கும் டெல்லியில் டிராக்டர் பேரணி நடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்றும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, குடியரசு தின விழாவை சீர்குலைக்க 2 ஆயிரம் டிராக்டர்களில் ராஜ்பாத் சாலைக்கு விவசாயிகள் வர உள்ளனர் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லிக்கு விவசாயிகளை நுழையவிடுவது பற்றி நீதிமன்றம் முடிவெடுக்காது, அது போலீசின் முடிவு என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…