24 மணி நேரமாகியும் வெளியாகவில்லை ! அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால் ,இறுதியாக வெளியான நிலவரம்

Published by
Venu

24 மணி நேரத்திற்கு மேலாகியும் டெல்லி சட்டப்பேரவையின்  மொத்த வாக்குப்பதிவு என்ன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  நேற்று முன்தினம் டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக அங்கு வாக்குப்பதிவு காலை முதலே மந்தமாக இருந்து வந்தது.ஆனால் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு சதவிகிதம் என்ன என்பதை அவ்வப்போது அறிவித்து வந்தது.இறுதியாக சனிக்கிழமை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பின்பு வெளியாகி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் மொத்த வாக்குப்பதிவு என்ன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,பெரும் அதிர்ச்சையாக உள்ளது.தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது ? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் முடிந்து பல மணி நேரமாகியும் இன்னும் ஏன் இறுதி வாக்குப்பதிவை வெளியிடவில்லை? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பின்னர் தான் நேற்று டெல்லி தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கணக்கு எடுக்கும் பணி காரணமாகவும், சரிபார்ப்பு பணி காரணமாகவும்  இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட தாமதம் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

 

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago