“ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம்” ! கடலை மிட்டாயின் நன்மைகள் குறித்து விளக்கிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

Published by
Ragi

ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதத்தில் கடலை மிட்டாயின் நன்மைகளை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊட்டச்சத்து மிகுந்த கடலை மிட்டாய் குறித்த விழிப்புணர்வை வீடியோ மூலம் தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அதில் கடலையும், வேர்க்கடலையையும், வெள்ளைப்பாகையையும் இணைத்து செய்யக்கூடியது தான் இந்த கடலை மிட்டாய். வேர்க்கடலை மற்றும் வெள்ளைப்பாகையில் அபரீதமான ஊட்டச்சத்து உள்ளதாகவும், இது எளிதாக நமக்கு கிடைப்பதால் இதன் அருமை யாருக்கும் தெரியவில்லை.

வெள்ளைப்பாகையில் உள்ள ஆன்டிஆக்ஸிடைன்ஸ் நமது உடலை இளமையாக வைக்க உதவும். வேர்க்கடலையில் உள்ள பீனாலிக் ஆசிட் இதயத்தை பாதுகாக்க உதவும். மேலும் இதிலுள்ள பைட்டோஸ்டெரோல்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். மேலும் வேர்க்கடலையில் உள்ள பொருட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் இந்த கடலை மிட்டாய் மறதி நோய் வராமலும் பாதுகாக்கும் . எல்லாவற்றுக்கும் மேலாக நமது தலை பளப்பளப்பாக வைக்கவும் உதவும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, சிங், மெக்னீசியம் உள்ளது மட்டுமில்லாமல் இதிலுள்ள அமினோ அமிலம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வளவு நன்மைகளை கொண்ட உணவு பொருளை தினமும் உண்டு பழகுங்கள் என்றும், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் பள்ளிகளில் சத்துணவை அளிப்பது போன்று கடலை மிட்டாயையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் தனது யோசனை என்றும் கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago