borewell [File Image]
பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தற்போது, அந்த குழந்தையை மீட்கும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சிவம் என்ற சிறுவனைக் காப்பாற்ற NDRF மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது.
சிவத்தின் தாயார், தான் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அங்கு தனது மகன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென கால் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவக் குழுக்களும் இடத்தில் உள்ளது எனவும், குழந்தையின் சத்தம் கேட்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேலும், ஆழ்துளை குழந்தையை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பல மூத்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…