பிரதமர் மோடியுடன் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் சந்திப்பு..!

Published by
Sharmi

இந்திய பிரதமர் மோடியுடன் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். 

ஒலிம்பிக் 32 ஆவது போட்டி டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 126 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 7 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்தனர். இவை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்கள் ஆகும்.

ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து சிறப்புமிக்க சாதனை படைத்தார். இதனை அடுத்து பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தஹியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். இதனை அடுத்து பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

மேலும், பி.வி.சிந்து ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றதால் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக பெருமை அடைந்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பரிசுகள், ரொக்க பணம்,  கார், வீடு, அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் பங்குகொண்ட வீரர்களுக்கு பாராட்டு விழாக்களும் தொடர்ச்சியாக நடந்து  வருகிறது.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு கொண்ட வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்கும் அவரது இல்லத்தில் காலை உணவு அளித்து சந்தித்து பேசினார். அதில் பதக்கம் வென்ற வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியுள்ளார். இதனை அடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Published by
Sharmi

Recent Posts

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

11 minutes ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

35 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

2 hours ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago