யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது.
பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது.
பின்னர் யெஸ் வங்கியில் தனியார் துறை வங்கிகள் சில முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடியை யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்போகிறது. இதைத்தொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி ரூ.1,000 கோடி, ஆக்சிஸ் பேங்க் ரூ.600 கோடி, கோடாக் பேங்க் ரூ.500 கோடியையும் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என்றும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என யெஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…