கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ்(கொரோனா) கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோழி சாப்பிடுவதால் கொரோனா (தற்போது கொவிட் 19 வைரஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது)வைரஸ் தாக்கம் என்ற செய்தி அதிகம் வெளியாகி வந்தது.இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.எனவே அச்சத்தை போக்கும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ,மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் கோழிக்கறியை சாப்பிட்டனர்.மேலும் கொரோனா பரவும் என்பது வெறும் வதந்தியே, அதில் துளியும் உண்மை இல்லை என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…