ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை,மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையான ஜான்விதாவுக்கு கடந்த ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.இதன்காரணமாக,பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து,அருகில் உள்ள கே.ஜி.எச். அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக குழந்தையை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல்,மருத்துவமனைக்கு வெளியிலேயே ஆம்புலன்ஸில் குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரமாக பெற்றோர் காத்திருந்தனர்.
இந்நிலையில்,படுக்கை வசதி கிடைக்கும் முன்பே அக்குழந்தை ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனால்,மருத்துவமனையின் வாசலிலேயே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…