முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த பெண்! 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Published by
மணிகண்டன்
  • தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா.
  • 11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, சயீதா என்கிற பெண் மருத்துவர் தன்னை விட்டு பிரிந்த திருமணமான காதலனை தனது கிளினிக்கிற்கு அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். அங்கு முன்னாள் காதலன் மீர் என்பவருக்கு மயக்கமருந்து கொடுத்து அவரது பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்து அதிக ரத்த போக்கை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து சயீதாவை கைது செய்தனர். ஆனால், அவர் இது விபத்தினால் ஏற்பட்டது என மறுத்துவந்தார்.

இந்த வழக்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது  முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் சயீதா குற்றவாளி என தீர்ப்பளித்தது பெங்களூரு நீதிமன்றம். அவருக்கு 10 ஆண்டு சிறையும் 2 லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த 2 லட்சரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி! 

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

45 seconds ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

7 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

8 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

10 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

10 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

11 hours ago