கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி கொண்டே இருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலையினால் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினமும் அதிக அளவிலான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தங்கள் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசுகள் வெவ்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்க கூடிய குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் அளிக்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…