கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டோட்டா சித்தவ்வனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜூனா. இவர் 20 ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்து உள்ளார். அதில் 10 ஏக்கர் நிலம்தான் அவருக்குச் சொந்தமானது. மீதி உள்ள 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கி பயிர் செய்து உள்ளார்.
இந்த 20 ஏக்கர் நிலத்தில் வேலை செய்ய 50 பேரை வேலைக்கு வைத்து உள்ளார்.மேலும்அதிக கடன் வாங்கி தான் வெங்காயத்தை துணிச்சலாக பயிர் செய்து உள்ளார். விளைச்சல் சரியாக இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது விலை குறைந்து இருந்தாலோ இவருக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்து இருந்திருப்பார்.
ஆனால் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியதால் விவசாயி மல்லிகார்ஜூனா தற்போது கோடீஸ்வரனாக மாறி உள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் , 2004-ம் ஆண்டு முதல் மழைக்காலத்தில் வெங்காய சாகுபடி செய்துவருகிறேன். “என் தலையெழுத்தை தற்போது வெங்காயம் மாற்றிவிட்டது” என மல்லிகார்ஜூனா.
நான் பயிர் செய்த 20 ஏக்கரில் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து இருக்கிறேன். சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை விற்றது. 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய தான் விவசாயம் செய்தேன்.எனக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால்அதை விட அதிகமாக வந்து வருமானம் வந்து உள்ளது.
தற்போது கடன் எல்லாம் அடைத்துவிட்டேன். ஒரு வீடு கட்டலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். வருங்காலத்தில் இன்னும் நிலம் வாங்கி விவசாயத்தை அதிகப்படுத்த விரும்புகிறேன்” என மல்லிகார்ஜூனா கூறினார்.
இங்கே தண்ணீருக்குப் பற்றாக்குறைதான். நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டும். இதனால் பல விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிட்டனர். திருடர்களிடமிருந்து வெங்காயத்தைக் காப்பாற்ற தங்கள் குடும்பத்தினர் ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருந்ததாகவும் கூறினார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…