ஆன்லைனில் ரம்மி விளையாடுவது சட்டவிரோதமானது என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அதேபோல ஆன்லைன் மோசடியும் அதிகரித்துவிட்டது. சில மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்க கூடிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இழந்து அதன்பின் கடன் தொல்லையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீப காலங்களாகவே அதிக அளவில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி பல்வேறு மாநிலங்களிலும் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் மனு அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதை அடுத்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசாங்கம் உறுதியளித்தது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை கேரளா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…