ஆன்லைனில் ரம்மி விளையாடுவது சட்டவிரோதமானது என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அதேபோல ஆன்லைன் மோசடியும் அதிகரித்துவிட்டது. சில மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்க கூடிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இழந்து அதன்பின் கடன் தொல்லையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீப காலங்களாகவே அதிக அளவில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி பல்வேறு மாநிலங்களிலும் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் மனு அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதை அடுத்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசாங்கம் உறுதியளித்தது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை கேரளா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…