டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி…! 3 பேர் கைது…!

Published by
லீனா

டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார். 

இன்று ஆன்லைன் மோசடி என்பது மிகவும் சகஜமாக மாறியுள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளான ஹர்ஷிதா தனது பழைய சோபாவை ஆன்லைனில் விற்பதற்காக, தனியார் இணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அதனை வாங்குவதாக விருப்பம் தெரிவித்தார். பின் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக கூறி, அவர் ஒரு கியூ ஆர் கோடை  அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறும் கூறியுள்ளார். ஹர்ஸிதா அதை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் சிறிய தொகை ஒன்று சேர்ந்துள்ளது.

பின் முழு தொகையை செலுத்துவதாக கூறி மற்றொரு கியூ ஆர் கோடு அனுப்பினார் அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் ரூ.20,000, பின் ரூ.14,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி போலீசாரிடம், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், ஹரியானாவின் நூ பகுதியை சேர்ந்த சாஜித், உத்தரப்பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த கபில், மன்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான வாரிஸ் என்பவர் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

6 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

7 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

8 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

8 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

11 hours ago