டெல்லியில் தற்பொழுது ஒரே ஒரு ஆக்சிஜன் ஆலை மட்டுமே இயங்கி வருவதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் வசதியின்றி மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் திணறி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரம் மிக அதிகமாக உள்ள நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் மிக அதிகளவில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் இந்த பணி தோல்வி அடைந்துவிட்டது, தாமதப்படுத்தப்படுகிறது என கூறுவது தவறானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அக்டோபர் 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பது யாவரும் அறிந்தது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலைகள் அனைத்தும் கடந்த வருடம் டிசம்பர் உள்ளேயே நிறுவப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தாலும், இதுவரை 140 ஆலைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு தனியாருக்கு வழங்கிவிட்டதாகவும் இதன் விளைவாக இந்தியா முழுவதும் 162 மையங்களில் 10 ஆலைகள் கூட இன்றுவரை செயல்படவில்லை எனவும், டெல்லியில் ஒரு ஆலை மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…