டெல்லியில் தற்பொழுது ஒரே ஒரு ஆக்சிஜன் ஆலை மட்டுமே இயங்கி வருவதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் வசதியின்றி மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் திணறி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரம் மிக அதிகமாக உள்ள நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் மிக அதிகளவில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் இந்த பணி தோல்வி அடைந்துவிட்டது, தாமதப்படுத்தப்படுகிறது என கூறுவது தவறானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அக்டோபர் 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பது யாவரும் அறிந்தது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலைகள் அனைத்தும் கடந்த வருடம் டிசம்பர் உள்ளேயே நிறுவப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தாலும், இதுவரை 140 ஆலைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு தனியாருக்கு வழங்கிவிட்டதாகவும் இதன் விளைவாக இந்தியா முழுவதும் 162 மையங்களில் 10 ஆலைகள் கூட இன்றுவரை செயல்படவில்லை எனவும், டெல்லியில் ஒரு ஆலை மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…