மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசியிருந்த நிலையில், இந்தியா தற்சார்பு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்றும், உள்நாட்டில் தயாரான பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்றும், மேற்கண்ட படைப்பிரிவுகளில் பணியாற்றும் 10 லட்சம் பேரின் குடும்பங்களில் மொத்தம் 50 லட்சம் பேர் இருக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…