நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து வந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபட்டு முழக்கம் எழுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சர்களாக நியமனம் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அமளி ஈடுபடுகிறார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தன்னை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி செய்ததால் பிரதமர் மோடி கடுமையாக எதிர்ப்பு பின்னரும், தொடர்ந்து எதிர்க்கட்சி அமளி செய்ததால் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்யும் தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். இதன்பின், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…