AIMIM Leader Asaduddin Owaisi [File Image]
டெல்லி: இன்று மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற இரண்டாம் நாளில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் என பலர் பதவியேற்று கொண்டனர். அப்போது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதிராபாத் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார்.
ஒவைசி, உருது மொழியில் பதவி பிராமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, பின்னர் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். மேலும், தக்பீர் அல்லாஹு அக்பர் என்றும் தனது மத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அப்போது சில எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் கோஷமிட்டதால் அவையில் சிறுது சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற நிகழ்வு முடிந்த பின்னர் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், மற்ற உறுப்பினர்களும் பலவிதமாக அவர்களுக்கு தோன்றியதை கூறினார்கள். நான் ‘ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று எனக்கு தோன்றியதை கூறினேன். அது எப்படி தவறாகும்.?
இப்படி சொல்ல கூடாது என அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்? அதேஎன்னிடம் கேட்டது போல மற்றவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். பாலஸ்தீனத்தைப் பற்றி மகாத்மா காந்தி கூறியதைப் படியுங்கள் என்று அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…