வரப்போகின்ற மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் போட்டியிடப்போவதாக முஸ்லிம் தலைவர்களின் சந்திப்புக்கு பின்பதாக கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வருகிற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த முறையாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் நடைபெற்ற தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையே அடிக்கடி பரபரப்பான வாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளை கலைக்க பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசியை பணத்தால் வாங்குவதற்கு யாரும் இல்லை எனவும், மம்தாவின் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய் சேரும் பொழுது அவர் தான் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நகரில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசிய ஓவைசி செய்தியாளர்களிடம் பேசுகையில், வரப்போகும் மேற்கு வாங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…