ஆந்திராவில் 5 நிமிடம் தாமதமாகிய ஆக்சிஜன் சப்ளை – உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள்!

Published by
Rebekal

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு தாமதமானதால் ஐசியூவில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் முறையாக கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு 5 நிமிடம் தாமதமாகி உள்ளது. இந்த ஐந்து நிமிட தாமதத்தில் ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத்தணறி உயிரிழந்துள்ளனர். இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

5 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

5 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

6 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

6 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

7 hours ago