பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸில் உள்ள சீக்கிய புனிதத்தலமான பொற்கோயிலின் முன்னாள் ஹசூரி ராகியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நிர்மல் சிங் கல்சா என்பவர் கொரோனா வைரசால் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது வென்ற 62 வயதான சீக்கிய ஆன்மீக பாடகர் நிர்மல் சிங் பஞ்சாபில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் வெளிநாட்டுக்கு சென்று சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். பின்னர் இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இவரது உடல் நிலை நேற்று கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவர் நேற்று மாலை 4.30 மணிக்கு பலியாகியுள்ளார். மேலும் இவர் பஞ்சாபில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மார்ச் 30ம் தேதி அனுமதிக்கபட்டார். பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடப்படுகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…