மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது, அதில் பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. திருமாவளவன் குற்றச்சாட்டு தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ எனவும், இதற்கு […]
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பர் 13,20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சேர்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, […]
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தன. அதாவது, மதரிஹட் என்கிற தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், எ.ஜி.கர் மருத்துவ மாணவி கொலை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலமரசுக்கு எதிராக இருந்தும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது. […]
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இடையே காலை போட்டி நடந்து வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வெளிட்டு இருக்கும் தகவலின் படி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் […]
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 10 வேட்பாளர்களும், ராம்கர் தேர்தலில் 5 பேரும், இமாம்கஞ்சில் 9 பேரும், பெலகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தராரி, ராம்கர் தொகுதிகளில் பாஜகவும், […]
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது பிரியங்கா காந்தி […]
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் 7 மணி முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பொது வெற்றி கணிப்பு ஓர் அளவுக்கு கணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இரட்டை வெற்றியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆம், பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி […]
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல்களின் முடிவுகளில் சந்தூர் மற்றும் சிகான் தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனையடுத்து , தற்போது கர்நாடகம் மாநிலத்தில் சந்தூர், ஷிகான்,, சன்னப்பட்னா ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. ஷிகான் : இடைத்தேர்தலில் காங்கிரஸ் […]
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபர் அலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியிலிருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது அதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். அதேநேரம், […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது. இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் […]
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அங்கு டெபாசிட் பெற 1,58,741 வாக்குகள் பெறவேண்டும். இந்த நிலையில், அவர் 3,34,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் இருக்கிறார். இதனால் அங்கு இவரின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதுவே அவர் போட்டியிடும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ, பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதன்படி, சிபிஐ-யின் சத்யன் மோக்கேரி 1.40 லட்சம் […]
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி வருகிறது. அதன்படி, மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது உத்தரப்பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் உள்ளார். கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி, பாஜகவின் மகாயுதி கூட்டணியில் பாஜக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 36 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி 57 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா […]
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த நவ-14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதியும் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதியது. நடைபெற்ற இந்த தேர்தலில் 67.74% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஜார்காண்டில் வெற்றி பெரும்பான்மைக்குத் தேவையானது 41 […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 110 தொகுதிகளில் […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் முதல் முதலாக தேர்தல் அரசியலில் களம் காண்கிறார். அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். வயநாட்டிடல் 62.92% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் […]
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை நோக்கி தான் இருக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களத்தில் உள்ளன. தற்போது தான் இப்போது தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கியுள்ளது. ஆனால், […]
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதே போல 2 மாநிலத்தில் 2 மக்களவை தொகுதி இடைத்தேர்தல், 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. 2 மாநில சட்டப்பேரவை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு […]
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால், பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னும் கூட பதற்றம் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் பதற்றம் […]
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், பல்வேறு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதனை அடுத்து அந்நிறுவனம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், அமெரிக்காவில் முதலீடு கோரும் கடன் பத்திர வெளியீடு திட்டத்தை […]