டெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனும் Japanese Encephalitis (JE) எனும் வைரஸ் காய்ச்சல் பரவிய ஒருவர் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்ற தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது பரவும் வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும், மாநிலதில் வேறு யாருக்கும் பரவவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு டெல்லி பகுதியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, வயநாட்டில் தனது பதிவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிக்கு மட்டும் இடைதேர்தலானது நடைபெற்றது. அதன்படி, கடந்த டிச.-13ம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைதேர்தலானது நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிச.23-ல் அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில், 6.22,238 வாக்குகள் பெற்று 4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் […]
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி, 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மேலும், கூட்டணியில் இருந்த காங்., 16 இடங்களில் வென்றது. 21 இடங்களை வென்று பாஜக எதிர்க்கட்சி […]
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று விடுமுறை என நேற்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நாளை ( நவம்பர் 28.11.2024) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையை கருத்தில் கொண்டு கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் […]
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் […]
டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதானி குழுமம் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதானி குழும விளக்கம் அளிக்கவும் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை […]
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருவதாகவும் ,இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில […]
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை இப்போதும் உலகம் 911 என்று நினைவு கூறுகிறது. ஆனால், அதை விட கொடூரமான ஒரு தாக்குதல் தான் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் தான். ட்வின் டவர் தாக்குதலை எப்படி 911 என பேசுகிறார்களோ அதே போல இந்த மும்பை தாக்குதலையும் 26/11 என 16 ஆண்டுகள் கடந்தும் பேசுகிறார்கள். மறக்க முடியாத […]
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1950 ஜனவரி 26இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியானது ஆண்டுதோறும் அரசியல் சாசன தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்டுகிறது. இன்று 75வது அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அலுவல் பணிகள் இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று பழைய நாடாளுமன்ற வளாகத்தில் […]
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாஜக 132 இடங்களை தனித்து பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற சூழல் நிலவுகிறது. கடந்த முறை தேர்தலில் பாஜக அதிக இடங்களை (105) பெற்றிருந்தாலும் , சிவசேனா ஆதரவுடன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஆட்சியை […]
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார். அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவர், 1965-ம் ஆண்டு தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி பின் தனது சகோதரர் ரவியுடன் இணைந்து இந்த எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கினார். […]
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜன. 12, 16,18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கலன்று நடத்தப்படவிருந்த தேர்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், ஜனவரி 14ல் நடைபெறவிருந்த தேர்வு, தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்க பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு அறிவித்ததாக கடும் […]
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை கனமழையை எதிர்கொள்ள உதவி அழைப்பு எண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரங்கல் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது அதானி விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஆனால், அவைத் தலைவர் ஓம் பிர்லா அது போன்ற விவாதங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால், மக்களவைக் கூட்டத் தொடர், நாள் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் இப்பொழுது முதல்வர் நாற்காலிக்கான போட்டி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் […]
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் இந்த கூட்டத் தொடரில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் […]
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உ.பி.,யில், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல வரவில்லை என்பதால் இப்படியான குற்றச்சாட்டை மாயாவதி முன் வைத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், […]
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை […]