தெலுங்கானா : தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த பகுதியில் வசிக்கும் மக்களை பதற வைத்தது. காலை 7 மணியளவில் லக்செட்டிபேட், ஜெய்ப்பூர், மஞ்சேரியல், காசிபேட், தண்டேபள்ளி மற்றும் ஹாஜிபூர் மண்டலங்களில் நடுக்கம் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்துவிடுமோ என்ற […]
பாட்னா : ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது மாநிலங்கள் சார்பில் ஜிஎஸ்டி வரிகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்படும். அந்த பரிந்துரைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து வரிகள் குறித்த பரிந்துரைகள் இறுதி செய்யப்படும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் பரிந்துரைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு […]
கேரளா : ஆலப்புழாவில் திங்கள்கிழமை இரவு நடந்த பயங்கர விபத்தில், 5 இளம் எம்பிஎஸ் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 7 எம்பிஎஸ் மாணவர்கள் காரில் கோச்சுக்கு ஆலப்புழா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் ரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தும் பயங்கரமாக வேகத்தில் வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு […]
சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]
புதுச்சேரி: புதுவையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும், நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தைத் […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் தாக்கம் புதுச்சேரியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்று புயல் புதுச்சேரியில் பகுதியில் கரையை கடந்தது தான். இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தி பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால் வெள்ளப்பெருகும் ஏற்பட்டு புதுச்சேரி குளம் போல் காட்சியளிக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றலும் பாதிக்கப்பட்டு அவர்கள் தண்ணீரில் […]
டெல்லி : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஃபெஞ்சல் புயலால் அந்தந்த மாவட்டங்களில் வெகு வருடங்கள் கழித்து பேய் மழை பெய்துள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி மழைநீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் அளிக்க […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். […]
தெலங்கானா: தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள சல்பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது. மேலும், […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் […]
புதுச்சேரி : நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பொது, புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே நாளில் 47 செ.மீ மழை பெய்துள்ளதால், தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. தமிழகம் – புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம், ஆரோவில், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. […]
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அங்கு முதலமைச்சர் யார் எப்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகாமல் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த வார தொடக்கத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி துவங்கபட்டது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் விவாதம் நடத்த இரு அவை சபாநாயகர்களும் அனுமதி தரவில்லை என கூறி […]
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை […]
மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு பெண் பேசியதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தததாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கை விசாரணை செய்த மும்பை போலீசார், அந்த போன் கால் மும்பை புறநகருக்கு வெளியில் இருந்து வந்ததாக கூறி, ஒரு பெண்ணை கைது […]
ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில் நடந்த இந்த பதவியேற்பு […]
டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இனிப்பு கடைக்கு அருகே ஒரு ஸ்கூட்டரில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், வெடிப்பு சத்தம் பெரியதாக […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2 முறையும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதன் பிறகு டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி தற்போது பொறுப்பில் உள்ளார். நாட்டின் தலைநகர் என்பதால், மாநிலத்தின் […]