பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது. போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார். நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு […]
டெல்லி: வேலைக்கான உத்தரவிட்ட தேதியில் இருந்து தான் பதவி உயர்வு கணக்கிடப்படுமே தவிர காலிப்பணியிடங்கள் அறிவித்த தேதியில் இருந்து பதவி உயர்வு கணக்கிடப்பட மாட்டாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. பீகார் மாநிலம் மின்சார வாரியத்தில், கடந்த 1976ஆம் ஆண்டு ஒரு நபர் உதவியாளர் பணியில் சேர்க்கப்படுகிறார். அந்த நபர் மாற்றுதிறனாளி மற்றும் பட்டியலின இடஒதுக்கீட்டின் படி, அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்சார வாரியத்தால் பணியமர்த்தப்படுகிறார். அந்த சமயம் , அடுத்து 1991ஆம் ஆண்டு […]
டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு தான் நிறுத்த கோரியது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும், அதில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்தும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதில், மத்திய பட்ஜெட்டில் […]
நிர்மலா சீதாராமன் : பட்ஜெட் தாக்கல் செய்த போது மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நேற்று செய்த 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் குறிப்பாக, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கினார்கள், மேலும், இந்த பட்ஜெட் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை […]
டெல்லி: நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதில் பொதுவான அறிவிப்புகளை தவிர்த்து, NDA கூட்டணி கட்சிகளின், பீகார் (நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் ஆந்திரா (சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்) மாநிலங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, […]
டெல்லி: நீட் தேர்வு முழுவதுமே முறைகேடு நடைபெறவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவு. நடப்பாண்டில் மருத்துவ சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் வழக்கு தொடர்ந்து இருந்த மாணவர்கள் தரப்பு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியாகி உள்ளதால் […]
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ்,தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க்கு தேசம் (ஆந்திரா), நிதிஷ்குமரின் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]
மத்திய பட்ஜெட் 2024 : மத்திய அரசின் கூட்டாளிகளை சமாதானப்படுத்தவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐதாக்கல் செய்தார். அதில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இளைஞர்களுக்கான திட்டத்தில், 1 லட்சம் ஊதியம் வரையில் புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய சார்பாக அதிகபட்சம் 15 ஆயிரம் வரையில் […]
டெல்லி: மத்திய பட்ஜெட் 2024 இன்று தாக்கல் செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது கருத்துக்களை கூறினார். அதில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிட்டார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக பணிபெண்களுக்கு தங்கும் விடுதிகள், சோலார் மூலம் 300 யூனிட் இலவச மின்சாரம், முதல் […]
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று பட்ஜெட் அறிக்கையில் குரிப்பிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இளைஞர்களுக்கான திட்டத்தில், 1 லட்சம் ஊதியம் வரையில் புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய சார்பாக அதிகபட்சம் 15 ஆயிரம் வரையில் ஊக்கத்தொகை […]
மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வந்த நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வந்தார். கடந்த […]
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏழைகள்,பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை என நிர்மலா சீதா ராமன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு பயனுள்ள வைகையில் அறிவிக்கப்பட்டதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கல்வி கடன் உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும். மாத ஊதியம் புதியதாக வேலைக்கு […]
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய வரிச்சலுகைகள் […]
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பாக புதிய வருமான வரி விகிதங்களை அறிவித்தார். அதில் முக்கிய அறிவிப்பாக, அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும் எனவும் தாமதமாக வருமான வரி செய்வது இனிமேல் கிரிமினல் குற்றமாக கருதப்படாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டில் உள்ள நிதி […]
மத்திய பட்ஜெட் 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு இருக்கிறார். அதில் முக்கிய அறிவிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும். அதைப்போல, […]
மத்திய பட்ஜெட் 2024 : மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்டிஏ தலைமையிலான கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இதன் காரணமாக தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலங்களுக்கு இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது அதனை மத்திய […]
மத்திய பட்ஜெட் 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறார். அதில் முக்கிய அறிவிப்பாக முதல் முறை பணிக்குச் செல்பவர்களுக்கு, அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தபடும் என அறிவித்தார். ஒரு மாதம் சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் […]
மத்திய பட்ஜெட் 2024 : மக்களவையில் 2024-2025 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டை தாக்கல் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன். இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றதுடன்மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான படஜெட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என கூறி […]
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளர். அதற்காக நேற்று (ஜூலை 22)இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஏற்கனவே 5 முறை முழு பட்ஜெட் ஒருமுறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ச்சியாக 7வது […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் ஜூலை 27-ஆம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த […]