பாலக்காடு : மின் நெருக்கடிக்கு தீர்வு காண, பகலில் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணத்தை குறைத்து, இரவில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கேரள அரசு யோசித்து வருவதாக, கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், பகல் நேர உபயோகத்திற்கு கட்டணத்தை குறைக்கவும், இரவு நேர உபயோகத்திற்கு கட்டணத்தை உயர்த்தவும் திட்டம். இதனால், பீக் ஹவர்களில் தேவையற்ற உபயோகம் தடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநில […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். அதன் பிறகான கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, கல்விக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான நிதி […]
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், நாடு முழுக்க அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பக்கமும் பரவியுள்ளது என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டின் இளைஞர்களை பாதித்த மிகப்பெரிய பிரச்சினையாகும். ஆனால் அதுபற்றி நிதியமைச்சர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. சிறு வணிகங்களை […]
டெல்லி : ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் 31இல் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பின்னர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சம்பாய் சோரன் புதிய முதல்வரானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஹேமந்த் சோரனை கைது […]
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் […]
CUET தேர்வு முடிவுகள் : கடந்த 2022ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்காக சேர்க்கைக்கு இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது. அதே போல இந்த நடப்பாண்டுக்கான CUET தேர்வானது கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் முறையாக எழுத்து தேர்வு முறையிலும், கணினி தேர்வு முறையிலும் என 2 முறையில் இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 13 […]
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தில், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் தானியா சோனி (வயது 25), ஸ்ரேயா யாதவ் (வயது 25) மற்றும் நவீன் டெல்வின் (வயது 28) ஆகிய மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு […]
டெல்லி : டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேங்கி உள்ளது. இதன் விளைவாக நேற்று இரவு 7 மணியளவில் அந்த மையத்தில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது தரைத்தளத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது. அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச […]
கேரளா: பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பாடப் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அடங்கிய புத்தக பைகளை கொண்டு செல்வதாக கேரளாவில் பெற்றோர்களின் கவலையாக உள்ளது என கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி நேற்று (வெள்ளி) தெரிவித்தார். இது குறித்து மாநில அரசு ஆலோசித்து வரும் புதிய திட்டம் பற்றியும் அமைச்சர் சிவன்குட்டி நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், கேரளாவில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக பைகள் எடை அதிகமாக […]
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
டெல்லி : மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் […]
நிதி ஆயோக் கூட்டம் : இன்று நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (27ம் தேதி ) 9வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக முதல்வர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் […]
கேரளா : ஒருவர் எந்த மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. அப்படி ஒருவர் மாற்று மதத்திற்கு மாறிவிட்டால் அந்த நபருக்கான ஆவணங்களில் தேவையான மாற்றங்களை அரசு அதிகாரிகள் செய்து தரவேண்டும் என கூறி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள், இந்து மதத்தை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள். பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த அவர்கள் பின்னர் கடந்த 2017, மே மாதம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அதனால், தங்களுக்கு பள்ளி சான்றிதழ்களிலும் மதத்தை மாற்றி […]
மத்திய பிரதேசம் : ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) எனும் இந்துத்துவா அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணைந்து பணியாற்ற கூடாது என 1966ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்எஸ்எஸ் தடை விவகாரம் குறித்து முன்னதாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023இல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் புருஷோத்தம் குப்தா என்பவர்,1966 ஆம் […]
கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். […]
ஹைதராபாத் : பொதுவாகவே பல லட்சம் செலவு செய்து கார் வாங்குகிறோம் என்றால் அதற்கான பதிவு நம்பரையும் ஃபேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல ஆயிரம் செலவு செய்வோம். ஆனால், நம்மை போல பிறரும் அதே ஃபேன்சி நம்பர் வேணும் என்றால் அதற்கு தீர்வாக அந்த நம்பரை ஏலத்தில் விடுவார்கள். அதில் அதிக தொகையில் அந்த நம்பரை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே அந்த நமபர் சொந்தமாகும். அதன்படி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் கைராதாபாத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து […]
டெல்லி: வங்கதேச கலவரத்தால் அங்கிருந்து 6700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. கல்லூரி மானவர்களின் போராட்டத்தால் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்காமல் மூடப்பட்டுவிட்டன. இதனால், வங்கதேசத்தில் பயின்று வரும் […]
டெல்லி : கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் வரம்புக்குட்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், “சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. […]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், […]