இந்தியா

எதற்கும் தயாராக இருக்கிறோம்.. மீட்புப்படை அதிகாரி முக்கிய தகவல்.!

வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு , கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், தமிழக மீட்புப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நாளையும் வயநாடு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை […]

#Kerala 5 Min Read
Brigadier Arjun Segan - Wayanad Landslide Rescue

ராகுலின் வயநாடு பயணம் திடீர் ரத்து.. காரணம் என்ன?

வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கடும் பாதிப்புக்குள்ளாகிய வயநாடு மலைப் பகுதிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைவிடாத […]

#Kerala 4 Min Read
Wayanad - Rahul Gandhi

வயநாட்டின் துயர் துடைக்க உதவுங்கள்… வங்கி விவரங்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம்.!

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் முதலமைச்சரின் நிவாரண […]

#Kerala 3 Min Read
Wayanad Landslides

வயநாடு நிலவரம் : முதல்வரின் ஆலோசனை முதல்., மீட்பு பணிகள் வரை.!

வயநாடு நிலச்சரிவு : நேற்று அதிகாலை கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டைக்கை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நிலச்சரிவு துயரத்தின் பாதிப்பை உணர்ந்ததும், மாநில மீட்பு படையினருடன், மத்திய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர் நேற்று முதலே […]

#Kerala 5 Min Read
Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan (1)

வயநாடு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்.!

கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக […]

#Accident 2 Min Read
Veena George

‘அந்த பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் இல்லை? ‘ ! பட்ஜெட் விவகாரத்தில் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் ..!

டெல்லி : கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி நடந்த கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் மத்திய படஜெட் தாக்கல் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த […]

#BJP 5 Min Read
Nirmala Seetharaman

வயநாடு நிலச்சரிவு – 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

வயநாடு : கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில், கனமழை காரணமாக நள்ளிரவில் மூன்று பகுதிகளில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணாமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேப்பாடி சுகாதார […]

#Kerala 4 Min Read
Wayanad

5,500 பேர் மீட்பு.! இதுவரை இல்லாத பேரழிவு.! முதல்வர் பினராயி விஜயன் தகவல்.!  

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு […]

#Kerala 8 Min Read
Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan

வயநாட்டை தொடர்ந்து மூணாறில் நிலச்சரிவு.! போக்குவரத்து கடும் பாதிப்பு.!

கேரளா : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு பகுதியில் மீட்புப்பணியில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மண்ணிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயநாடு நிலச்சரிவு போல, இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலும் […]

#Kerala 3 Min Read
Traffic in Munnar area has been affected by the landslide

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பெரும் நிலச்சரிவு.!

கர்நாடகா : கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் (ஜூலை 30) துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹொசன் மாவட்டத்தில் மங்களூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஷீரடி கட் சக்லேஷ்பூர் டோடோ என்ற பகுதியில் நிகழ்ந்த […]

#Karnataka 2 Min Read
Landslide - Karnataka

நாளை வயநாடு விரையும் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி.! 

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை 3 வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இந்த மீட்பு பணிகளில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், இன்றைய […]

#Kerala 4 Min Read
Priyanka Gandhi - Rahul Gandhi

வயநாடு நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.!

கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80-க்கும் மேற்பட்ட உயிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 400 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். இந்திய ராணுவம், என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் பிற அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், […]

#Kerala 3 Min Read
Wayanad Landslide

வயாநாடு நிலச்சரிவு…பலி எண்ணிக்கை 70-ஆக உயர்வு!!

வயநாடு நிலச்சரிவு : கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த  கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது . இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் முன்னதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து, பலி எண்ணிக்கை 60 லிருந்த்து 70-ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணியில்  […]

#Kerala 4 Min Read
Wayanad Landslides

மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.8,500 கோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

டெல்லி : நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கடந்த வாரம் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு போதிய திட்ட அறிவிப்புகள் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இதே கருத்தை முன்வைத்தார். மேலும், மகாபாரதத்தை […]

#BJP 5 Min Read
Congress MP Rahul gandhi

தற்காலிக மருத்துவமனைகள்.., நடமாடும் பிணவறைகள்.! கேரள அமைச்சர் முக்கிய ஆலோசனை.!

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரையில் 60ஐ கடந்துள்ளது. மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சாலைகள் , பாலங்கள் மூழ்கியதால் பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. மீட்பு பணிகளில் கேரள மீட்புப்படையினர் மட்டுமல்லாது, தேசிய மீட்புப்படையினர், இந்திய […]

#Kerala 5 Min Read
Kerala Health Minister Veena George

தொடரும் நிலச்சரிவு விபத்துகள்.., மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ராகுல் காந்தி.!

டெல்லி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்து மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவித்தார். அதே போல ராகுல் காந்தி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், […]

#Kerala 5 Min Read
Congress MP Rahul Gandhi talk about Wayanad Landslide incident

வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடல்!!

கேரளா : கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் காரணமாக அட்டமலையில் இருந்து முண்டகை வரையில் போக்குவரத்துக்கு இருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மாநில மற்றும் மத்திய மீட்புப்படையினர் […]

#Kerala 4 Min Read
Landslides in Kerala

வயநாடு நிலச்சரிவு: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. மீட்பு பணியில் இந்திய ராணுவம்.!

கேரளா : கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில், கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. மீட்புப் பணிகள் பாதுகாப்புத்துறை  குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதியிடம் பேசி கேட்டறிந்தார். அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இந்த […]

#Kerala 4 Min Read
Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு.!

கேரளா : தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சுமார், 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முண்டக்கை – சூரல்மலை இடையே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் […]

#Kerala 3 Min Read
Landslide - Wayanad

அதிகரிக்கும் வயநாடு நிலச்சரிவு உயிரிழப்புகள்… மீட்புப்பணிகள் தீவிரம்.!

கேரளா: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். கனமழை காரணமாக, வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தான் சுமார் 500 குடும்பங்கள் சிக்கியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த […]

#Kerala 4 Min Read
Kerala Wayanad landslide