இந்தியா

‘தந்தையை இழந்த போது எப்படி உணர்ந்தேனோ அப்படி உணர்கிறேன்’ – ராகுல் காந்தி பேட்டி..!

கேரளா : கனமழையின் எதிரொலியால் கேரளாவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட சூரல்மலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கடந்த ஜூலை-30ம் தேதி அன்று அதிகாலையில் வயநாட்டில் பெரும் செலவில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து நேற்றைய தினமே ராகுல் காந்தி வயநாடு விரைந்து அங்கு பாதிப்படைந்த மக்களை பார்வையிட வரவிருந்தனர். ஆனால், அங்கு இடைவிடாத மழை மற்றும் […]

#Kerala 6 Min Read
Rahul Gandhi , Congress Leader

8 கி.மீ. அடித்து செல்லப்பட்ட காட்சி.. வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் புகைப்படங்ள்.!

கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]

#ISRO 4 Min Read
Wayanad landslide - ISRO

அட்சய பாத்திரத்திற்கு பதில், பிச்சை பத்திரமா.? கனிமொழி எம்.பி ஆவேசம்.!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வார செவ்வாய் அன்று மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார். அதில், மத்திய அரசு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என […]

#BJP 7 Min Read
DMK MP Kanimozhi

வயநாடு பெருந்துயரம்.. ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு.!

கேரளா : நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் சூரல்மலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். காந்த ஜூலை 30 அதிகாலையில் வயநாட்டில் உள்ள முண்டக்காய் மற்றும் சூரல்மலையில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். இன்னும், 240 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை1,000க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளனர். நிலச்சரிவால் […]

#Kerala 4 Min Read
Wayanad Landslide

உயிரிழந்தோர் உடல்கள்., இழந்த சான்றிதழ்கள்., நிவாரண பொருட்கள்.! பினராயி விஜயன் கோரிக்கை.! 

வயநாடு : வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி நிலவரங்கள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அடுத்ததாக, வயநாட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று நிலச்சரிவு பற்றி ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், வயாநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலரும் […]

#Kerala 6 Min Read
Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan (2)

பெங்களூருவுக்கு உதவுங்கள்… பிரதமரிடம் கோரிக்கை வைத்த துணை முதல்வர்.!

பெங்களூரு : அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பொதுவான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தாண்டி பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் தங்கள் மாநில கோரிக்கைகளை முன்னிறுத்தி […]

#Bengaluru 4 Min Read
Bengaluru City - PM Modi

பட்டியலினத்தவர்களுக்கு உள்இடஒதுக்கீடு செல்லும்.! உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு இதோ…

டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பட்டியலின சமூகத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்ட்ட இடஒதுக்கீட்டு முறையில் உள்இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின. இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது. அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை […]

#DMK 6 Min Read
Supreme court of India

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு.. 22 பேர் மாயம்.!

ஹிமாச்சல பிரதேசம் : இமாச்சல பிரதேசத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா, மண்டி மற்றும் குலு ஆகிய இடங்களில் மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் உள்ள சமேஜ் காட் பகுதியில் நேற்று இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், குறைந்தது 22 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், பேரிடர் மீட்புக் குழு சம்பவ […]

#Cloudburst 3 Min Read
cloudburst - Himachal Pradesh

புதிய நாடாளுமன்றத்தில் ஒழுகும் மழைநீர்.. வாளி வைத்த ஊழியர்கள்.! வைரல் வீடியோ…

டெல்லி : டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பினால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக ராஜிந்தர் நகர், நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியில் மழைநீர் கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகியது. ஒழுகிய மழைநீரை வாளி வைத்து ஊழியர்கள் பிடித்துள்ளனர் […]

#BJP 4 Min Read
Samajwadi Party MP Akhilesh Yadav Tweet about rain fall in New Parliament Building

வயநாடு நிலவரம்: முதல்வரின் பயணம் முதல்., பலி எண்ணிக்கை வரை.!

கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியிருப்போரை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு 3வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. இன்னும் 240 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் : முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, […]

#Kerala 4 Min Read
wayanad landslide - pinarayi vijayan

3 நாட்களுக்கு இலவச டேட்டா, Unlimited Calls! வயநாடு வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்த ஏர்டெல்..!

வயநாடு நிலச்சரிவு :  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், […]

#Kerala 4 Min Read
Wayanad landslides airtel

தோண்ட தோண்ட உடல்கள்.. கொட்டும் மழையிலும் மீட்புப் பணி.. பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியது!

கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்தது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 225 பேருக்கும் மேல் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், […]

#Kerala 4 Min Read
Wayanad

மீட்புப்பணியில் ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது.! ராகுல் காந்தி பாராட்டு.! 

டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 180க்கும் அதிகமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்திய ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். சூரல்மலை , முண்டக்கை […]

#Kerala 5 Min Read
Congress MP Rahul gandhi - Wayanad Landslide

79 ஆண்கள், 64 பெண்கள்.! இன்னும் 191 பேரை காணவில்லை.! கேரளா முதல்வர் தகவல்.!

வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள், இறப்பு விவரங்கள் ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் , நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது வரலாறு காணாத மற்றும் வேதனையளிக்கும் பேரழிவு ஆகும். இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் […]

#Kerala 5 Min Read
Kerala CM Pinarayi Vijayan speak about Wayanad Landslide

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரிப்பு!

வயநாடு நிலச்சரிவு : தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 150-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும்  தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது. இதில், உயிரிழந்த […]

#Kerala 3 Min Read
Wayanad Landslides

கேரள முதல்வரின் வயநாடு பயணத்தில் திடீர் மாற்றம்.! நாளை அனைத்துக்கட்சி கூட்டம்.!

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் பாதிப்புகள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணியில் மத்திய மாநில மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர், தமிழக மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் […]

#Kerala 3 Min Read
kerala CM Pinarayi Vijayan - Wayanad Landslide

UPSC-ன் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!

ப்ரீத்தி சுதன் : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலராக இருந்த பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரீத்தி சுதன் தற்போது யுபிஎஸ்சி-ன் உறுப்பினராக உள்ளார். UPSC-ன் முன்னாள் தலைவர் மனோஜ் சோனி ஆவார். அவர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், புதிய இயக்குநராக பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரீத்தி சுதன் UPSC தலைவராக பொறுப்பேற்கும் நியமனம் தொடர்பான அறிக்கையில், அவர், […]

Health Secretary 4 Min Read
preeti sudan - upsc

எதற்கும் தயாராக இருக்கிறோம்.. மீட்புப்படை அதிகாரி முக்கிய தகவல்.!

வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு , கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், தமிழக மீட்புப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நாளையும் வயநாடு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை […]

#Kerala 5 Min Read
Brigadier Arjun Segan - Wayanad Landslide Rescue

ராகுலின் வயநாடு பயணம் திடீர் ரத்து.. காரணம் என்ன?

வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கடும் பாதிப்புக்குள்ளாகிய வயநாடு மலைப் பகுதிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைவிடாத […]

#Kerala 4 Min Read
Wayanad - Rahul Gandhi

வயநாட்டின் துயர் துடைக்க உதவுங்கள்… வங்கி விவரங்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம்.!

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் முதலமைச்சரின் நிவாரண […]

#Kerala 3 Min Read
Wayanad Landslides