8 கி.மீ. அடித்து செல்லப்பட்ட காட்சி.. வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் புகைப்படங்ள்.!

கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட

Wayanad landslide - ISRO

கேரளா :இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன.

unknown node

Wayanad landslides [image-NRSC]இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு மையம் அதன் கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோளையும், மேக மூடு வழியாக பார்க்கும் திறன் கொண்ட RISAT செயற்கைக்கோளையும் பயன்படுத்தி இந்த புகைப்படங்களை துல்லியமாக எடுத்துள்ளது.

அதன்படி, ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்தது, இது ராஷ்டிரபதி பவனின் அளவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம். நிலம் நீருடன் ஆற்றின் குறுக்கே கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் கீழே ஓடியது, இதனால் கீழே இருந்த மூன்று கிராமங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது என தெரிகிறது.

unknown node

Wayanad landslides [image-NRSC]இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதே இடத்தில் பழைய நிலச்சரிவு ஏற்பட்டதற்கான ஆதாரத்தையும் இருப்பதையும் காட்டுகிறது.