8 கி.மீ. அடித்து செல்லப்பட்ட காட்சி.. வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் புகைப்படங்ள்.!

கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன.
அதன்படி, ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்தது, இது ராஷ்டிரபதி பவனின் அளவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம். நிலம் நீருடன் ஆற்றின் குறுக்கே கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் கீழே ஓடியது, இதனால் கீழே இருந்த மூன்று கிராமங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது என தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025